×

மோடியே திரும்பி போ என கருத்து பதிவிட்ட ஓவியா : பிரதமரை அவமதிக்கும் செயல் என போலீசில் பாஜகவினர் புகார்!!

சென்னை : பிரதமர் மோடிக்கு எதிராக ட்விட்டரில் கருத்து தெரிவித்த நடிகை ஓவியா மீது பாஜகவினர் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று அரசு விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்து இருந்தார். ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், சென்னை-வண்ணாரப்பேட்டை முதல், விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்கம் , தூத்துக்குடி எரிவாயு குழாய் திட்டம் போன்றவற்றை தொடங்கி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். இந்த விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்னர்.

முன்னதாக பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. நீட் தேர்வு, இந்தி திணிப்பு என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு #GoBackModi என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் டிரெண்டானது.அந்த வகையில் தமிழகம் வந்த மோடிக்கு எதிராக நடிகை ஓவியாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் #Gobackmodi என பதிவிட்டிருந்தார். இது பேசும் பொருளானது.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக #GoBackModi என கருத்தை பதிவிட்ட நடிகை ஓவியா மீது பாஜக வழக்கறிஞர் ஒருவர் சிபிசிஐடி சைபர் கிரைமில் புகார் மனு அளித்துள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும், இறையாண்மையை கடுக்கும் வகையிலும் செயல்பட்டதாக புகாரில் கூறி உள்ளனர். மேலும் ஓவியாவின் கருத்துக்கள் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் உள்ளதால், அவர் மீது வழக்குப்பதிந்து விசாரணைக்கு உட்படுத்த அந்த புகார் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Oviya ,Modi ,BJP , ஓவியா
× RELATED பிரதமர் மோடிக்கு மக்கள் ஓய்வு தருவார்கள் : காங்கிரஸ்